*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 13 June
by : Eddy Joel Silsbee
சகல ஜனங்களுக்கும் நன்மையை கொடுக்கும் தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
கருப்போ சிவப்போ, வெள்ளையோ மாநிறமோ, திறமைசாலியோ புத்திகுறைவானவர்களோ;
எல்லோரையும் தேவனே படைத்தார்.
*தாமாக யாரும் உருவாகவில்லை*. 2தீமோ. 2:20-21
தேவனுடைய சித்தம் இல்லாமல் நாம் யாரும் இப்படி பிறந்துவிடவில்லை.
ஊனமாய் இருந்தாலும் சரி, அழகின்மையாய் இருந்தாலும் சரி;
வாய் எப்படி இருக்க வேண்டும், மூக்கு எப்படி இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் அவரே தீர்மானித்து நம்மை இந்த உலகிற்கு அனுப்பி வைத்து இருக்கிறார். 1கொரி. 12:18
அறிவாளிக்கும் முட்டாளுக்கும் கொடுக்கப்பட்ட மூளையின் அளவு ஒன்று தான். *இருவருக்குமே சுமார் 1,400 கிராம் தான் இருக்கும்*.
படிப்பும் திறமையும் பகட்டும் அந்தந்தும் பிரபல்யமும் இந்த உலகில் உபயோகப்படுமேயன்றி பரலோகத்தில் இல்லை. மத். 22:30
ஆகவே, ஒன்று போல எல்லாரையும் நேசிக்க வேண்டும்.
பாகுபாடு பார்த்தல் அறவே கூடாது. தேவன் பட்சபாதமுள்ளவரல்லவே. கலா. 2:6, 1பேதுரு 1:17
நாமும் அவ்வாறே அவரைப் போல இருக்க போதிக்கப்பட்டுள்ளோம். 1பேதுரு1:16
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக