சனி, 24 ஏப்ரல், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 24 April 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

புதிய உடன்படிக்கையை உண்டுபண்ணின இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

*எழுத்து கொல்லுகிறது. ஆவி உயிர்பிக்கிறது* என்று பவுல் மூலமாக ஆவியானவர் 2கொரி. 3:6ல் நமக்கு எழுதி வைத்தார்.

 

மோசேயின் நியாயபிரமாணத்தை சிலுவையில் முடித்து வைத்தார் இயேசு கிறிஸ்து. ரோ.10:4

 

கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமே உண்டாயின. யோ. 1:17

 

கிறிஸ்துவினிடத்தில் கொண்டு விடுகிறது நியாயபிரமாணம். கலா. 3:24. அதாவது, நியாயபிரமாணம் என்பது ஆரம்பம். இப்போது நிறைவான கிறிஸ்துவின் பிரமாணமே நடைமுறையில் உள்ளது. கொலோ. 2:10, 17

 

நமக்கு பகையாக இருந்ததும், புறஜாதியாராகிய நம்மை பிரிவினைப்படுத்தி இருந்த நியாயபிரமாணத்தை தன் மாம்சத்தினாலே ஒழித்தார். எபே. 2:14-16

 

கிறிஸ்துவின் சுவிசேஷத்தை (புதிய ஏற்பாட்டின் முதல் 4 புத்தகம்) தொடர்ந்து வரும் அனைத்து நிருபங்களும் புதிய உடன்படிக்கையை பின்பற்ற நம்மை வலியுறுத்துகிறது.

 

மோசேயின் நியாயபிரமானம் கிறிஸ்தவர்களுக்கு இல்லை என்று எவ்வளவு சொல்லியிருந்தும் மக்கள் வணங்கா கழுத்து உள்ளவர்களாய் தான் இருக்கிறார்கள்.

 

சொந்த மொழியில் வேதாகமம் இருந்தாலும் உணர்வு இல்லை.

 

மோசே நியாயபிரமாணத்தை கொண்டு வந்த போது *3000 பேர் மரித்தார்கள்* - யாத். 32:28

 

கிறிஸ்து புதிய உடன்படிக்கை சபையை ஸ்தாபித்தபோது *3000 பேர் ஞானஸ்நானம் பெற்று நித்தியதிற்கென்று உயிர்தார்கள்* - அப். 2:41

 

கொள்ளை நோயின் காரணமாக வாரத்தின் முதல் நாளில் கூடுவதை தற்காலம் அரசாங்கம் தடைசெய்தவுடன், பழைய ஏற்பாட்டுக்கு உயிர் கொடுக்கத் துவங்கிய இன்றைய கிறிஸ்தவ மத சபைகள், நாதாபும் அபியுவும் செய்த செயலை நினைவு படுத்துகிறது. எண். 3:4

 

தேவன் பட்சபாதமற்றவர். சூழ்நிலையை மனதில் கொண்டு பழைய கட்டளையை நினைவுக்கூர்ந்து செயல்படுத்திய மோசேயைக் கூட அவர் விட்டுவைக்கவில்லை. எண். 20:11, 20:8, யாத். 17:6

 

நீங்கள் எந்த காலம்? உணர்வடைவோம். கர்த்தருடைய நாளை அசட்டை செய்யாதிருப்போம்.

 

கர்த்தருடைய நாளில் குடும்பமாக கூடுவதற்கும், அவருடைய பந்தியை  வீட்டில் இருந்து இரட்சிக்கப்பட்ட குடும்பத் தலைவன் பரிமாறுவதற்கும், அவசியப்பட்டால் சபை ஊழியர் அவர்களுக்கு தேவ செய்தியை காணொளி மூலம் கொண்டு சேர்ப்பதற்கும் எந்த தடையும் இல்லையே !!  

 

காணிக்கை அல்ல, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிதலே முக்கியம். உணர்வுள்ள சபையார், அதையும் சீராய் செய்ய மாட்டார்களோ ??

 

நியாயபிரமாணத்திற்கல்ல, கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு கீழ்படியவேண்டும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443   

 

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக