திங்கள், 8 மார்ச், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 8 Mar 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் இனிய நாள் வாழ்த்துக்கள்.

 

தேவாலயத்திற்கு போசீஷர்கள் திரும்பும் போது அங்கு சொல்லப்பட்ட போதனையோ,

பாடின பாடல்களோ,

நடந்த தொழுகை முறைமைகளோ மனதில் முதன்மையாக வைக்காமல்,

கட்டிடத்தைக்குறித்து,

இந்தக் கல், அந்தக் கல் என்று *கட்டிடத்தின் அழகை* விமரிசித்துக்கொண்டு இருந்தனர் (மாற்கு13:1)

 

புதிய ஏற்பாட்டு காலத்தில் இருக்கும் நாம்,

*எந்தக் கட்டிடத்திலும் தேவன் வசிப்பது இல்லை* என்று அறியவேண்டும்.

 

நாம் தான் ஆலயம்.

கூடும் இடமோ வெறுமனே ஆராதனைக் கூடம் அல்லது ஒரு வளாகம் மாத்திரமே.

 

தேவனுக்கு உகந்த கீழ்படிதலினால் தொழுகை அலங்கரிக்காமல்,

கட்டிடத்தின் அழகையும்,

பலவிதக் கருவிகளினாலும்,

ஸ்பீக்கர் பாக்ஸ்களினாலும்,

அலங்கரித்துவிட்டனர் இந்தக் கால *கிறிஸ்தவ மதத்தினர்*.

 

உண்மையான ஆலயத்தை விட்டு உயிரற்ற கல்லுகளால் ஆன கட்டிடத்தை வணங்க கூடாது.

 

*கிறிஸ்தவ மதத்தை விட்டு, கிறிஸ்தவ மார்க்கத்தை படித்து,  கற்றுக்கொள்ள முற்பட்டால், கிறிஸ்துவின் வருகையில் நாம் சேர்த்துக்கொள்ளப்பட ஏதுவாகும்*.

 

நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. ரோ. 13:11

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+968 93215440

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

 

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக