*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
உள்ளந்திரியங்களை காணும் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
தேவனுடைய முகத்தை பார்க்க வேண்டும் என்று மோசே ஆசைப்பட்டார்.
தேவனோ, தன் முகத்தையல்ல *தன்மையை* மோசேக்கு வெளிப்படுத்துகிறார் (யாத் 33:18-19, 34:6)
மனுஷனுக்கு சரீர அலங்காரம், பகட்டு உடுப்பு, கெம்பீர பார்வை இவை எல்லாம் ஜனங்களுக்கு மத்தியில் பிரயோஜனப்படலாம் ஆனால் – தேவன் எதிர்பார்ப்பதோ – தன்மையை / தூய்மையான, கீழ்படிதலான இருதயத்தை.
அவரை போல் ஆகுங்கள் என்று நமக்கு கட்டளை கொடுத்தார். 1பேது 1:16
ஆகவே நாமும் அவரைப் போல இரக்கமும் தயவும் மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையையும் கொண்டிருக்கவேண்டியது. கொலோ 3:12
வெளி அலங்காரத்தைக் காட்டிலும் உள்ளான அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் !!
நாம் மனந்திரும்பும்படிக்கு இன்று வரை அவர் நீடிய பொறுமையோடு இருக்கிறாராரம். 2பேது 3:15.
சடிதியில் கோபித்துக் கொண்டு தேவன் கொடுத்த வாழ்க்கையையே பாரமாகவும் கடமைக்காகவும் வாழ்ந்து உதாசீனப்படுத்தி வைராக்கியத்தோடு மாதங்களை கழிக்கிறவர்கள் – தாங்கள் ஜெபிக்கவும் வேதம் வாசிக்கவும் உட்காரும் முன்பு இதை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
தேவன் நீடிய பொறுமை உள்ளவராம்...
நாம் அந்த நீ.......டிய பொறுமையை எப்பொழுது கற்றுக் கொள்ளபோகிறோம்?
பொறுமை இருந்தால், இரக்கமும் சமாதானமும் தானாய் வந்து சேரும். யாக் 1:4, 5:11
இன்று கர்த்தருக்கான நாள் !!
தேவனை துதித்து தொழுது கொள்ளும்படியாக அவருடைய மரணத்தை நினைவுகூறவேண்டும்.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:
https://www.youtube.com/c/EddyJoels/videos
ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020
*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 30 Aug 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக