*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
வானத்திலும் பூமியிலும் சகலத்தையும் மற்றும் நம் அனைவரையும் சிருஷ்டித்த நம் தேவன் தாமே தொடர்ந்து ஆதரிப்பாராக.
எல்லா முயற்சியும் வீணாகி விட்டதே,
எவ்வளவு முயன்றும் பிரச்சனையை கடந்து வர முடியவில்லையே என்று கலங்கி ஓரமாய் நிற்கும் போது,
யாரிடத்தில் போய் நாம் முறையிட்டாலும்,
தங்கள் அனுதாபத்தை மாத்திரமே காண்பிப்பார்களேயன்றி - நமக்கு உதவுவதோ, ஆதரிப்பதோ, ஒத்தாசையாக கூடவே இருப்பதோ - வெகு சிலரே.
நேரடியாய் கண்டிராவிட்டாலும், வார்த்தையின் மூலம் கேள்விப்பட்டு நம்பிக்கையை மாத்திரமே நாம் கொண்டிருந்தாலும் – இரட்சகராகிய ஆண்டவரோ நம்முடைய கண்ணீரையும், இருதயத்தின் பாரங்களையும் கண்டு உணர்ந்து சீர்செய்து சரி படுத்துகிறவர். ஏசா 63:9, சங் 145:19
உலகத்தில் இருக்கும் “எந்த” அல்லது “எப்படிப்பட்ட” பிரச்சனையாய் இருந்தாலும், அதை அவரால் சரி செய்ய முடியும் !! சங் 106:44-46
அவர் எல்லோரையும் விட பெரியவர் (1யோ4:4)
அவருக்கு செவிசாய்த்து, வார்த்தைக்கு கீழ்படிந்து சொந்த இருதயத்தை சுத்தம் செய்யும்போது – சகலமும் சீர்படும். மத் 5:8
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:
https://www.youtube.com/c/EddyJoels/videos

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக