*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
அளவில்லாமல் நம்மை நேசிக்கும் தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நம்முடைய ஜீவனையும் சுவாசத்தையும் எப்படி தவம் இருந்தாலும் கையில் பிடித்து வைக்க முடியாது. சங் 104:29
எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும் அசுத்தமாயிருந்தாலும், நமக்கு எவ்வளவு காலம் இங்கு வாழவேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ, அவ்வளவு காலம் தான் நமக்கு ! யோபு 34:14-15
படுக்கையை விட்டு காலையில் கண் விழித்து எழுந்து விடுவதால், ஏதோ ஒன்றை சாதித்ததால் உயிரோடு இருக்கிறோம் என்று நினைக்கலாகாது. புதிய நாளை காண செய்த தேவன் நம் மீது கிருபையாய் ஒரு நாளை நம் ஆயுளில் கூட்டி வழங்கியிருக்கிறார். சங் 3:5, 4:8, ஏசா 50:4
நம் ஜீவன் ஒரு நிழலை போன்றது (பிர 6:12)
எப்பொழுது யார் எடுக்கப்படுவார்கள் என்று யாருக்கும் தெரியாது.
ஆகவே, இருக்கும் காலத்தில் சப்பை கட்டு கட்டாமல் மற்றவர்களோடு உள்ள விரோதம், கோபம், வைராக்கியம், விசும்பல் எல்லாவற்றையும் தூர களைந்து போட்டு தேவனுடைய உண்மையான, முழுமையான பிள்ளையாய் இருக்க முற்படவேண்டும்.
இன்று கர்த்தருடைய நாள். சமாதானமும் சந்தோஷமும் நிறைந்தவர்களாய் இன்றும் நமக்கு ஆயுளைத்தந்த தேவனை - சபையாய் கூடி தொழுது கொள்வோம்.
அவரே நம்மை வழிநடத்துவாராக.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:
https://www.youtube.com/c/EddyJoels/videos

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக