வியாழன், 20 ஆகஸ்ட், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 20 Aug 2020

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

By : Eddy Joel Silsbee

 

பரலோகத்திலிருந்து இறங்கின தேவகுமாரனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

கர்த்தருடைய வார்த்தையை கேட்டு அதற்கு முழுவதுமாய் கீழ்படியும் போது, துவக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் போராட்டம் இருந்தாலும், முடிவு நிச்சயம் ஜெயமாக தான் இருக்கும்.

 

இயேசுவை கிறிஸ்துவாக கொண்ட ஜனமே ஜெயிக்கும். மாற்றுக்கருத்தே இல்லை. 1யோ 5:5


நீதிமான் ஒருபோதும் கேடு அடைவது இல்லை. நீதி12:21

 

உறுதியாய் கிறிஸ்துவை பற்றிக்கொள்வோம்.

 

காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, தற்போது இருக்கும் துன்பம் எல்லாம் அதிசீக்கிரத்தில் நீங்கி மிக மேன்மையான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. 2கொரி 4:17

 

உங்களுடைய விசுவாசம் உறுதியானதா என்று அறியும்படிக்கு ஏற்படும் எந்த பிரச்சனையையும் சவாலாக ஏற்று அதில் ஜெயித்து காட்டுங்கள். எல்லா பொறுமையையும் கடைபிடித்து போராட்டத்தில் ஜெபத்தோடு வெல்லுங்கள். யாக் 1:3-4

 

கிறிஸ்துவின் சத்தியத்தின்படி கீழ்படிந்து தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கே சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோ 8:28

 

கருவில் உருவாகும் முன்னே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றால், நம்மை அழைத்தவர் கிறிஸ்துவே... அவரே நம்மை மகிமையும் படுத்துவார்.. ரோ 8:30

 

ஆகவே நீடிய பொறுமையாயிருங்கள்... நம்பிக்கையோடே கிறிஸ்துவை பற்றிக்கொண்டிருங்கள். யாக் 5:7-8

 

கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. 2தெச 3:5


*Eddy Joel Silsbee*

Preacher – The Churches of Christ

Teacher – World Bible School

WhatsApp # +91 8144 77 6229

 

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

 

வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:

https://www.youtube.com/c/EddyJoels/videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக